பிப்.5-இல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 29, 2015

பிப்.5-இல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மாநிலம் முழுவதும் பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தேர்வில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிகளுக்கான செய்முறைத் தேர்வு கால அட்டவணை தயாரித்தல், தேர்வு கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்களை நியமித்தல், செய்முறைத் தேர்வுக்குத் தேவையான ஆய்வகக் கருவிகளை உறுதிசெய்தல் உள்ளிட்டப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு செய்முறைத் தேர்வு நடத்தும் பொறுப்பு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒப்படைத்துள்ளது. பிளஸ் 2 செய்முறைத் தேர்வின் மதிப்பெண் பட்டியலை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 31 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

No comments:

Post a Comment