அரசுப் பொதுத்தேர்வில் சாதிக்க வேண்டுமெனில்... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 12, 2015

அரசுப் பொதுத்தேர்வில் சாதிக்க வேண்டுமெனில்...

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருப்பீர்கள். அதிக மதிப்பெண் என்பதுதான் அனைவரின் லட்சியமும். ஆனால், அதற்கான வழிமுறைகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டுமல்லவா!
எப்படி படித்தால் தேர்வில் சாதிக்கலாம்?
* படிப்பது மட்டுமே நமது வேலை. மற்றவர்களை போட்டியாக நினைக்கக்கூடாது.

* திருப்புதல் தேர்வுகளின்போது, சரியாகப் படித்தால் நிறைய மதிப்பெண் எடுக்க முடியும்.

* தேர்வுக்கு, இறுதி மூன்று மாதங்கள், கூடுதல் கவனமுடன், சின்னச் சின்ன திட்டமிடல்களுடன் படிக்க வேண்டும்.

* முதன்மைப் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், மொழிப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* திட்டமிட்டு படித்தலே வெற்றிக்கு அடிப்படை.

* வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

* தியானப் பயிற்சி செய்வதால் டென்ஷன் குறையும்; ஞாபக சக்தி அதிகரிக்கும்.

* முந்தைய ஆண்டு வினாத்தாள்களுக்கு விடையளித்தும், வரைபடங்களை வரைந்தும் பயிற்சி எடுக்க வேண்டும்.

* ஒவ்வொரு நாளும், வகுப்பறையில் நடத்தும் பாடங்களை திட்டமிட்டு படித்து வீட்டிற்கு வந்ததும் எழுதிப்பார்ப்பது சிறந்தது.

* பிழைகள் இல்லாமல், தெளிவாகவும்; அர்த்தம் மாறாமலும் தேர்வு எழுதப் பழக வேண்டும்.

* மறுநாள் படிக்கலாம் என நினைக்காமல், தினமும் படிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் வீட்டில் சுயமாக தேர்வு எழுதி பயிற்சி பெறவேண்டும்.

* இரவு துாக்கம் வரும்வரை படிக்கலாம். டிவி பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

* காய்கறி, பழங்கள் உண்பது மனதையும், உடலையும் புத்துணர்வுடன் வைக்கும்.

* லட்சியத்துடன் படித்தால் தேர்வில் அனைவரும் சாதிக்கலாம்.

No comments:

Post a Comment