மாண்புமிகு.தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை இன்று(16.10.2021_சனி) திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்பொதுச் செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள் சந்தித்தார்கள்.
இச்சந்திப்பில் தேசிய அடைவுத்தேர்வு,ஆசிரியர்பொதுமாறுதல்,ஆசிரியர் நியமன வயது வரம்பு மற்றும் மக்களைத் தேடி பள்ளித்திட்டம் ஆகியன குறித்து ஆசிரியர் மன்றத்தின் கோரிக்கைகள்-கருத்துகள் முன் வைக்கப்பட்டது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டுக்கொண்டுள்ள மாண்புமிகு.பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது என்றும் உரியனவற்றை செய்வதாகவும் நம்பிக்கைத் தந்தார்கள். மாண்புமிகு.அமைச்சர் அவர்கள் வரும் 21.10.2021அன்று சந்திக்கும் பொழுது இன்னும் விரிவாக பேசலாம் என்றும் கூறியுள்ளார்கள். மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் திருச்சி சந்திப்பு தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயத்திற்கு பெரும்நன்மைபயக்கும்-பேருதவி செய்யும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் நம்புகிறது
அன்புடன்.
முனைவர்-மன்றம்.
நா.சண்முகநாதன்
பொதுச் செயலாளர்
திருச்சி
16.10.2021
No comments:
Post a Comment