உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாகபிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்கொடிது கொடிது வறுமை கொடிது
வயிற்றுப் பசிப் போக்க
கயிற்றில் நடக்கும் கொடுமை
காசு போடாத கல் நெஞ்சங்கள்
நூல் இழை தவறினாலும் மரணம்
நுட்பமாக வேண்டும் கவனம்
இந்தியா ஏவுகணை ஏவி என்ன பயன் ?
ஏழ்மையை ஒழிக்க வழி காணுங்கள்
அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்
அழுகி வீணாகப்போகும் தானியங்களை
அல்லல் படும் ஏழைகளுக்கு வழங்குங்கள்
வேலைக்கு உத்திரவாதம் வழங்குங்கள்
இரவி

No comments:
Post a Comment