புதுச்சேரியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு 18 பேர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31–ந்தேதி நடக்கிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 24, 2014

புதுச்சேரியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு 18 பேர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31–ந்தேதி நடக்கிறது.

பள்ளிக்கல்வித்துறையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த ஆண்டு நிரப்பப்படாமல் இருந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர், மிகமிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தினர் ஆகியோருக்கான 19 தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்களை
நிரப்பிட கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
மொத்தம் 302 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனைக்குப்பின் மதிப்பெண் அடிப்படையில் 18பேர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவில் 15 பேரும், மிகமிக பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், உடல் ஊனமுற்றோர் பிரிவில் தலா ஒருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் https://www.py.gov.in அல்லது http://schooledn.puducherry.gov.in என்ற வலைதளத்திலும் தெரிந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்காக வருகிற 31–ந்தேதி காலை 10 மணிக்கு புதுவையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு வருமாறு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment