சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்ந்தது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 29, 2014

சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்ந்தது

14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.40.71 கமிஷனாக வழங்கி வந்தன.
இந்த கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று, இந்த கமிஷன் தொகையை 3 ரூபாய் உயர்த்தி, சிலிண்டருக்கு ரூ.43.71 கமிஷனாக வழங்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன.
இதனையடுத்து, இந்த கமிஷன் உயர்வு வாடிக்கையாளர்களின் விற்பனை விலையில் எதிரொலிக்கும். சென்னையில் இதுவரை 401 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மானிய சிலிண்டரின் விலை, இனி 3 ரூபாய் அதிகரித்து, 404 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
இதேபோல், மானியமல்லாத சிலிண்டரின் விலையிலும் கூடுதலாக 3 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment