பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 28, 2014

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்ற பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு, அக்.27-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களுக்கு நேரில் சென்று மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள்
இணைய தளத்தில் வெளியிடப்படமாட்டாது.
மறு கூட்டல்: விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவைமையத்தில் அக்.29-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெறுவதற்கு பகுதி 1 மற்றும் 2 மொழி பாடத்துக்கு தலா ரூ.550, ஏனைய பாடங்களுக்கு தலா ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு பகுதி
1 மற்றும் பகுதி 2 மொழி பாடத்துக்கு தலா ரூ.305, ஏனைய பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்துடன் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப பதிவு ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள எண்ணை பயன்படுத்தி, தேர்வுத் துறையால் அறிவிக்கப்படும் தேதியில் இணைய தளம் மூலம் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறு கூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment