மாணவர் சேர்க்கை 25 க்கும் குறைவாக உள்ள ஏழு மாநகராட்சி பள்ளிகளை , தனியார் மூலம் நடத்தி , வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கையை அதிகரிக்க ,சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, November 29, 2014

மாணவர் சேர்க்கை 25 க்கும் குறைவாக உள்ள ஏழு மாநகராட்சி பள்ளிகளை , தனியார் மூலம் நடத்தி , வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கையை அதிகரிக்க ,சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


மாணவர் சேர்க்கை 25 க்கும் குறைவாக உள்ள ஏழு மாநகராட்சி பள்ளிகளை , தனியார் மூலம் நடத்தி , வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கையை அதிகரிக்க ,சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன் , ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்த
மாணவர்கள் எண்ணிக்கை , தற்போது 80 ஆயிரமாக குறைந்துள்ளது . தனியாருக்கு எது ? குறிப்பாக , திருவல்லிக்கேணி , சேத்துபட்டு , தி . நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் , மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது . ஒட்டுமொத்த வகுப்பிலும் சேர்த்து 50 மாணவர்கள் மட்டும் உள்ள பள்ளிகள் நகரில் அதிகமாக உள்ளன . மொத்தம் 25 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் ஏழு பள்ளிகள் தற்போது இயங்கி வருகின்றன . அந்த பள்ளிகளை மூட விரும்பாத மாநகராட்சி நிர்வாகம் , 25 க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகளை , தனியார் மூலம் நடத்தி , சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது . அதற்காக , மும்பை , டில்லி , ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள பெரிய கல்வி நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய மாநகராட்சி கல்வித்துறை , ஏழு பள்ளிகளை தேர்வு செய்து , அப்பள்ளிகளை வரும் கல்வியாண்டு முதல் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது . இதன்படி பள்ளி கட்டடம் , உபகரணங்கள் , மின் கட்டணம் , பராமரிப்பு , மாணவர்களுக்கான சலுகைகள் வழங்குவது ஆகிய பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும் . நிர்வாகம் , ஆசிரியர்கள் நியமனம் , மாணவர் சேர்க்கை ஆகிய பணிகளை , பள்ளியை நடத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் . அதற்காக ஒரு மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டிற்கு செலவிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது . எந்தெந்த பணிகள் ? இதுகுறித்து , மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது : தி . நகர் ., திருவல்லிக்கேணி , சேத்துப்பட்டு உள்ளிட்ட தனியார் பள்ளிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள இடங்களில் , மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது . இந்த பகுதிகளில் மட்டும் ஏழு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க தேர்வு செய்யப்பட்டது . கல்வியாண்டு துவங்குவதற்கு முன் , இந்த பள்ளிகளை நடத்த உள்ள நிறுவனங்கள் விரும்பும் வகையில் , கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் . சீருடை மாற்றம் குறித்து முடிவு செய்யப்படவில்லை . இவ்வாறு அவர் கூறினார் . விரிவாக்க பகுதிக்கு விடிவு எப்போது ? சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் , நகராட்சி பள்ளிகளை , மாநகராட்சி கல்வித்துறை கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்க , தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் . இது குறித்து அரசாணை வெளியிட , மாநகராட்சி , அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளது . ஆனால் , இதுவரை அனுமதி கிடைக்காததால் , விரிவாக்க பகுதி பள்ளிகள் பரிதாப நிலையில் உள்ளன . அரசு கல்வித்துறையை காட்டிலும் , மாநகராட்சி கல்வித்துறை மூலம் , மாணவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்படுவதால் , விரைவில் விரிவாக்க பகுதி பள்ளிகளை , மாநகராட்சியோடு சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது

No comments:

Post a Comment