உயர் கல்வி சேர்க்கை 42 சதவீதமாக உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 17, 2015

உயர் கல்வி சேர்க்கை 42 சதவீதமாக உயர்வு

அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்க பள்ளிகளை தொடங்கியும், 1,317 நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்தியும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.

மேலும், இணைய வழி வகுப்புகள், கணினிவழி வகுப்புகள், பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் போன்ற புதுமையான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி கல்வித் தரத்திற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது. தரமான கல்வி கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய 76,338 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு இந்த அரசு ஒப்புதல் அளித்தது மட்டுமல்லாமல், இதுவரை 72,597 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மடிக்கணினிகள், இடைநிலை கல்வியில் இடைநிற்றலை குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை, விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், நான்கு சீருடை தொகுப்புகள், காலணிகள், புத்தக பைகள், பேருந்து பயண சலுகை அட்டைகள், மிதி வண்டிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை 2011–2012 ஆம் ஆண்டிலிருந்து 2014–2015 ஆம் ஆண்டு வரை மொத்தம் 8,748.89 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு வழங்கியுள்ளது.

தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பது பாராட்டத்தக்கது.

கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்கள் உயர்கல்வி பயில சம வாய்ப்பு பெறுவதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 11 பல் தொழில் நுட்பவியல் கல்லூரிகளையும், 4 பொறியியல் கல்லூரிகளையும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த அரசு தொடங்கியுள்ளது. இதே போன்று, 2011–2012 ஆம் ஆண்டிலிருந்து 2013–2014ஆம் ஆண்டு வரை 1,800 ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதுடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 796 புதிய பாடப்பிரிவுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் 10,204 மாணவர்கள் இதுவரை பயன்பெற்றுள்னர்.

தகவல் தொழில் நுட்பத்துறையில் தமிழகத்தை மேலும் முன்னேற்றம் பெறச்செய்ய மத்திய அரசோடும், தொழில் துறையோடும் இணைந்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இந்திய தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனத்தை இந்த அரசு அமைத்துள்ளது. இத்தகைய பல்வேறு முன் முயற்சிகளின் காரணமாக உயர் கல்வி சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 21 சதவீதமாக உள்ள போதிலும் தமிழ்நாட்டில் 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment