தமிழகத்தில் 76,338 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டது.
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது:
அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த 4 ண்டுகளில் 182 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல் 1,317 நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இணையவழி வகுப்புகள், கணினிவழி வகுப்புகள், பள்ளிகளில் தகவல், தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் போன்ற புதுமையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 76,338 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இடைநிலைக் கல்வியில் பயிலும் மாணவர்கள் இடையில் நிற்றலைக் குறைப்பதற்காக சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், மிதிவண்டிகள் போன்றவற்றுக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8 ஆயிரத்து 749 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment