தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் (NMMS) பேர்ணாம்பட்டு ஒன்றியம்  ஊராட்சி  ஒன்றிய நடுநிலை பள்ளிகளின் மாணவர்கள் 10 பேர் சாதனை!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 18, 2015

தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் (NMMS) பேர்ணாம்பட்டு ஒன்றியம்  ஊராட்சி  ஒன்றிய நடுநிலை பள்ளிகளின் மாணவர்கள் 10 பேர் சாதனை!!!

தமிழ்நாடு ஆசிரியர் செய்தி குழுவின் வாழ்த்துக்கள்.!!!!!!!
தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் (NMMS)  பேர்ணாம்பட்டு ஒன்றியம்  ஊராட்சி  ஒன்றிய நடுநிலை பள்ளிகளின் மாணவர்கள் சாதனை
                தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் (NMMS)   பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளிகள்  பேரணாம்பட்டு, சின்னபள்ளிக்குப்பம், சிந்தகணவாய், மலையாம்பட்டு, ஈச்சம்பட்டு   ஆகிய  5  பள்ளிகளின்  மாணவர்கள் மொத்தம் 10 பேர் தேர்வில் வெற்றி பெற்று சாதனை  படைத்தனர்.                                                                                                                                                  
            தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு (NMMS) தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை,உயர்நிலை ,நடுநிலைப் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு  கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது .தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்க்கு அவர்களின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி அதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஐநூறு ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 24 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசின் நிதியிலிருந்து மாநில அரசு செலுத்துகிறது.தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். தேர்வின்  முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 6695 மாணவர்கள்  தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.  

  பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் மாணவர்கள் ரஞ்சித், ஏழுமலை, ராஜிவ் நர்மிளா, மதுவீனா, சாதனா ஆகிய ஆறு பேர் மற்றும் ஈச்சம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவி காவியா, மலையாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவன் அருண்ராஜ், சின்னபள்ளிகுப்பம்  ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவன் சஞ்சய்,   சிந்தகணவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் மாணவன்  ரஜினி ஆகிய நான்கு பள்ளிகளின்  மாணவர்கள்  உள்ளிட்ட தேர்வில் மொத்தம் 10 பேர் ஒன்றியத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
         வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தமிழ் நாடு ஆசிரியர் செய்திக்குழு பாராட்டுகிறது.
        இது குறித்து வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகையில் ,நாங்கள் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது.எங்களின் வெற்றிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மற்றும்  கணித பட்டதாரி ஆசிரியர்  திரு. எலிஷா அவர்களின் சிறப்புப் பயிற்சி காரணம் என கூறினர்

No comments:

Post a Comment