ஹெல்மட் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் அல்லாமல், பெண்கள், சிறார்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று உத்தரவிட்டது.
கட்டாய ஹெல்மட்டுக்கு தடை விதிக்கக் கோரி நிம்மு வசந்த் என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி, கட்டாய ஹெல்மட் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறினார்.
மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் அல்லாமல், பெண்களும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்றும், இது குறித்த உத்தரவை மறு ஆய்வு செய்வதற்கு இடமே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment