நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, ராணுவத்தில் சேர விரும்புவோர், இனி, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சென்னை பிராந்தியத்தில், இந்த புதிய முறை செப்டம்பரில் அமலாகிறது, என, ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அதிகாரி (சென்னை பிராந்தியம்), அவினாஷ் டி.பித்ரே கூறினார்.
ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான உடன், ராணுவ ஆட்தேர்வு மையத்தின், புதிய இணையதளமான, joinindianarmy.nic.in-ல் காணப்படும் விண்ணப்பத்தை,
ஆன் - லைனில் பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். ராணுவ வீரர் பணியில் சேர விரும்புவோருக்கு, தேவையான தகுதிகள்; ஆன்-லைன் மனுவோடு இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள் விவரம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உட்பட, பல தகவல்களை இளைஞர்கள் அறிந்து கொள்ள, voober என்ற புதிய மொபைல் போன், அப்ளிகேஷனை - ஆப்பை, ராணுவம் முதன்முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆண்ட்ராய்டு மொபைல் போன் உபயோகிப்பாளர், அதை, கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்.
No comments:
Post a Comment