இட்டர்சியில் ரயில் சேவை இன்று முதல் துவக்கம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 22, 2015

இட்டர்சியில் ரயில் சேவை இன்று முதல் துவக்கம்!

இட்டர்சி: இட்டர்சியில் சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீவிபத்தால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை, 34 நாட்களுக்குப்பின் இன்று முதல் துவக்கப்படுகிறது.

தீவிபத்து: ம.பி., மாநிலம் இட்டர்சி ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி, சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீவிபத்தில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் எரிந்து சேதமாகின. வடக்கு, மத்திய மற்றும் தெற்கு ரயில்வேயை இணைக்கும் இட்டர்சி ரயில் நிலையம் வழியாக, தினமும் 145 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 60 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இவ்விபத்தால் ரயில்கள் பல ரத்தாகின.

ரயில்கள் ரத்து: கடந்த 17ம் தேதி முதல், சுமார் 2,404 ரயில்கள் ரத்து செய்யப்பட நிலையில், 259 ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. விபத்து நடந்த நாளிலிருந்து, இதுவரை இட்டர்சி வழியாக பயணம் செய்யும் 5,016 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டதால், தினமும் 50 ஆயிரம் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணங்கள் திருப்பி கொடுக்கப்பட்டு வந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

துவக்கம்: இந்நிலையில் கடந்த 34 நாட்களாக நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் நேற்றுடன் முடிவடைந்ததால், ரயில் சேவை இன்று முதல் துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிபத்துக்குப்பின் முதல் ரயிலாக, கோரக்பூரிலிருந்து மும்பை செல்லும் குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இட்டார்சி வழியாக இயக்கப்படுகிறது.

No comments:

Post a Comment