அக்டோபர் 19 (நிகழ்வுகள்) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 19, 2015

அக்டோபர் 19 (நிகழ்வுகள்)

இன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள்

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.

புகழ்பெற்ற மேற்கோள்கள்

'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'

தமிழன் என்றோர் இனமுன்று
தனியே அதற்கோர் குணமுண்டு'

'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'

'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

மொழிப்பற்று

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே
தரணிக்கே ஓரணி செய்வோமே
அமிழிதம் தமிழ் மொழி என்றாரே
அப்பெயர் குறைவது நன்றாமோ

No comments:

Post a Comment