மாணவர் வாசிப்பு திறன் அதிகரிப்பு : இணை இயக்குனர் பெருமிதம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 7, 2015

மாணவர் வாசிப்பு திறன் அதிகரிப்பு : இணை இயக்குனர் பெருமிதம்

தமிழகத்தில் தொடக்கக் கல்வி மாணவர்கள் வாசிப்பு திறன் 10 சதவீதம் அதிகரித்துள்ளது," என, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார். மதுரையில்  நிருபரிடம் அவர் கூறியதாவது:

எஸ்.எஸ்.ஏ., மற்றும் தொடக்கக் கல்வி சார்பில் மாணவர்களை மதிப்பீடு செய்து, தமிழ், ஆங்கிலத்தில் எழுதுதல், வாசித்தல் மற்றும் அடிப்படை கணித அறிவுத் திறனை அதிகரிக்கும் வகையில், மாநில அடைவு தேர்வுகள் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர் வாசிப்பு திறன் 90 சதவீதமாகவும், எழுதும் திறன் 80 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

வாசிப்பு, எழுதும் திறன் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை தேசிய அளவில் கல்வி வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தி வரும் 'பிரதாம்' நிறுவனமும் உறுதி செய்துள்ளது.அக்.,15 உலக கை கழுவும் தினம். மாணவர்கள் சாப்பிடும் முன்னரும், கழிப்பறையை பயன்படுத்திய பின்னரும், கை கழுவும் முறை குறித்து பள்ளிகளில் செயல் விளக்கம் நடத்த, கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு 'கிரேடு' : மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மாணவர்கள் திறன் அடைவு தேர்ச்சிக்கு ஏற்ப அந்த ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை சார்பில் 'ஏ', 'பி', 'சி', என 'கிரேடு' வழங்கப்படுகின்றன. இதில் தொடர்ந்து 'சி' கிரேடு பெறும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உடன் இருந்தார்.

No comments:

Post a Comment