உயர் நீதிமன்றத்துக்கு டிச.23 முதல் 31 வரை விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 19, 2015

உயர் நீதிமன்றத்துக்கு டிச.23 முதல் 31 வரை விடுமுறை

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு டிச.23 முதல் 31 வரை கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 29-ஆம் தேதி விடுமுறைக் கால நீதிமன்றம் இயங்குகிறது.இது தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, டிச. 23 முதல் 31 வரை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் விடுமுறைக்கால அலுவலர்கள் செயல்படுவர்.அவசர வழக்குகளுக்கான மனுக்களை 28-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.29-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை விடுமுறைக்கால நீதிமன்றம் இயங்கும். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வும், மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வும் விசாரணை செய்யும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment