இன்று மார்கழி ஆரம்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 16, 2015

இன்று மார்கழி ஆரம்பம்

இன்று மார்கழி ஆரம்பம்

சகோதரிகளே
மார்கழி கோலம் மகத்துவம் பற்றி் தெரிந்து கொள்ளுங்களேன்!

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது.

அந்த வரிசையில் மார்கழி மாதம் என்றால் அழகிய கோலம் தான் சிறப்பு.

இந்த மாதத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் விதவிதமான கோலங்கள் அணி வகுத்து பார்க்க அழகாய் காட்சியளிக்கும்.

வருடத்திற்கு 12 மாதங்கள் உள்ளன. 

ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும்
ஏன் கோலமிட்டு
வீட்டை சிறப்பு செய்கிறார்கள் ,
மற்ற மாதங்களுக்கு இந்த சிறப்பு இல்லாதது ஏன்? என்பது பற்றி பெண்கள் சிலரிடம் கேட்டோம்.

“மார்கழி மாதம் முழுவதும் பீடை நாட்கள் (கெட்ட நாள்) என்பார்கள்.

இந்த மாதத்தில் எந்த சுப காரியங்களும் நடைபெறாது.

ஆதலால்,
இந்த பீடை நாட்கள் நீங்குவதற்க்காக அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு கள் மற்றும் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீடுகளில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விடவேண் டும்.

அதிகாலை நேரங்களில் வீட்டில் விளக்கு எரியவேண்டும்.

வீடு முழுவதும் பிரகாசமாக காட்சியளிக்க வேண்டும்.

அதிகாலை 4 மணிக்கு வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடவேண்டும்.

அதில் சில சம்பிர தாயங்கள் உள்ளன.

வாசலில் ஒரு திசையை நோக்கி தண்ணீர் தெளிக்கும் போது, பாத்திரத்தில் உள்ள நீர் தீர்ந்த பிறகு தான், மறுதிசையில் மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க வேண்டும்.

குறை நீருடன் மறுதிசையில் தண்ணீர் தெளிக்கக் கூடாது.

இந்த சம்பிரதாயத்தை இன்றும் நாங்கள் கடைபிடிக்கிறோம்” என்றார் ஒரு பெண்மணி.

மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கோலமிட்டிருப்பார்கள்.

கோலம் போட்டு முடித் ததும், அந்த கோலத்தின் நடுவில் சிறிதளவு மாட்டுச்சாணம் வைத்து, அதில் பரங்கிப் பூ வைக்க வேண்டும்.

மார்கழி மாசத்துல , வீட்டு வாசல்ல  கோலம் போட்டு,  நடுவில்சாணம் வச்சு , அதில, பறங்கி பூவை வைக்கறது
நம்ம  வழக்கம்.

அது ஏன்னு தெரியுமா? 

மஞ்சள் நிறத்துல பறங்கிப்பூ இருக்கறதால , அதை வைக்குற வீட்ல , மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும்ங்கறது  நம்பிக்கை.

பூமலர்ந்து இருக்குறதால அது மாதிரி , வீட்ல இருக்குறவங்க
சந்தோஷமா இருப்பாங்க .

மாட்டுச் சாணம் கிருமி நாசினிங்கறதால , வீட்ல இருக்குறவங்களுக்குஆரோக்கியம் தரும்.

கிருஷ்ண பரமாத்மா கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாவேன்” சொல்றாரு.

அப்படீன்னு அத ஏன் நல்ல மாசம் இல்ல பீடை மாசம்னு சொல்றோம்னு கேக்கலாம்.

அது பீடை மாசம் இல்ல…

பீடுடைய மாசம்  (அதாவது செல்வம் நிறைந்த  மாசம்) என்பது தான் கொஞ்சம் கொஞ்சமாமருவி  பீடை மாசம்னு  ஆகிடுச்சாம்.

நம்மோட சம்பிரதாயப்படி, ஆடி, புரட்டாசி, மார்கழி மாசங்கள்ல கல்யாணம் வேற பல சுப நிகழ்ச்சிகள் நடத்துறது இல்ல.

காரணம் என்னனா  இந்த மாசம் எல்லாம் முழுக்க முழுக்க இறைவழிப்பட்டுக்குனு  ஒதுக்கப்படவேண்டிய மாசங்கலாம் .

அதிலும் மார்கழி மகத்துவம் நிறைந்ததாம் .

மார்கழி மாசங்கறது தேவர்களது ஒரு நாளுல விடியற்காலை பொழுதாம்.

விடியற்காலை அப்படீனாலே மங்களகரமானது.

அதனாலதான் மாசம் முழுசும்  இறை வழிபாட்டுக்குனே  பெரியோர்கள் ஒதுக்கி வச்சு இருக்காங்கலாம்.

இந்த மாசத்துல, சுபநிகழ்ச்சி நடத்தினா , வழிபாடு பாதிக்கும்கறதால ,இந்த மாசத்துல விசேஷம் எதையும் நடத்த  மாட்டாங்களாம் .

மார்கழி மாசத்த , “மார்கசீர்ஷம்” அப்படீன்னு வட மொழியில் சொல்வாங்களாம். “மார்கம்” அப்படீனா வழி, “சீர்ஷம்” அப்படீனா உயர்ந்த. “வழிகளுக்குள் தலைசிறந்தது” அப்படீங்கறது அர்த்தமாம்.

வருஷத்துல மத்த நாட்கள்ல கோவில்களுக்கு போக முடியாதவங்க இந்த மார்கழி மாசத்துல மட்டும் கோவிலுக்கு போனாலே வருஷம் முழுசும் கோவிலுக்கு போன பலன் கிடைக்குமாம்.
   
மார்கழி மாசத்துல அதிகாலையில் 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குச் போகனும்னு சொல்றதுக்கு ஒரு
அறிவியல் காரணமும் இருக்கு .

மார்கழி மாதத்தில் அதிகாலைல
சுத்தமான ஓசோன் வாயுவை சுவாசிக்க முடியும்  .

இது புத்துணர்ச்சி தரும்.

மார்கழி மாச காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் ரொம்ப நல்லது.

கோலம் போடறதால பாட்டு பாட்றதால மனசு ஒருமை படுத்த முடியும் .

இம்மாதத்தில் அனைவர் வீட்டு வாசலிலும் அழகிய கோலங்களும், தீபங்களும் அணிவகுத்து அழகுற காட்சியளிக்கின்றன.

வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டுக்கு நல்லது என்கிறார்கள்.

அரிசி மாவால கோலம் போடறதால எறும்பு,குருவி மாதிரி ஜீவராசிகள் அத சாப்பிட்டு வாழும்.
புண்ணியமும் கிடைக்கும்.

No comments:

Post a Comment