இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பெரும்பாலானோர் பாடப் புத்தகங்களையும், நோட்டுகளையும்
மழையால் இழந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக புத்தகம், நோட்டு முதலானவைகளை அளிப்பதாக அறிவித்திருந்தது.
இதுநாள் வரை முழுமையாக அம்மாணவர்களை போய் சேரவில்லை. ஒருமாத காலமாக விடுமுறையில் இருந்ததால்
மாணவர்களிடையை கல்வி பயில்வதில் தொய்வு ஏற்பட்டிருக்கிற நிலையில் தொடர் பயிற்சியின் மூலமாக மற்ற மாவட்ட
மாணவர்களுக்கு இணையாக தேர்ச்சி பெற வைக்க முடியும்.
இந்நிலையில் வருகிற 23-ந் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால்
மாணவர்களிடையே கல்வி பயிலும் ஆர்வம் குறைந்து, எதிர்காலத்தில் வாழ்வில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று
கல்வியாளர்கள் கருதுகின்றனர். அதே சமயம் தமிழர் பண்டிகையாம் பொங்கலின்போது தேர்வை அறிவித்திருக்கிறது. போகி
பண்டிகையன்றும் காணும் பொங்கலுக்கு மறுநாளும் பொதுத்தேர்வு நடத்த இருக்கின்றனர். இதுவும் மாணவர்களின் ஆர்வத்தை பெரிதும்
பாதிக்கும். பொங்கல் பண்டிகையின் இடையில் தேர்வு வைப்பதை தவிர்க்க இந்து முன்னணி பள்ளி கல்வித்துறையை
கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment