பள்ளி மாணவர்களுக்கு, அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாக சென்றடைந்ததா? என்பது குறித்த விபரங்களை சேகரிக்கும் பணியில், கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,
சீருடை, காலணி, பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் தவிர, ஆறு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஜியாமென்ட்ரி பாக்ஸ், வரைபடம், சைக்கிள், லேப்-டாப்ஆகியவை வழங்கப்படுகின்றன. அடுத்த மாதம், பிளஸ்2 பொதுத்தேர்வு நடக்கும் நிலையில், இலவச திட்டம் சென்றடைந்த மாணவ, மாணவியர் விபரத்தை, மாவட்டம், தாலுகா, ஒன்றியம் வாரியாக சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை உயரதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் இறுதியில், பட்ஜெட்டை ஒட்டி இப்பணி மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், நலத்திட்ட விபரங்கள் குறித்து தகவல் சேகரிக்கப்படுகின்றன என்றனர்.
Friday, February 19, 2016
New
மாணவர்களுக்கு நலத்திட்டம்; தகவல் சேகரிக்கும் கல்வித்துறை.
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment