மார்ச் 3இல் உள்ளூர் விடுமுறை.
அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மார்ச் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் (அரசுப் பொதுத்தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக்கருவூலங்கள் மட்டும் அவசரப் பணிகள் கருதி தேவையான பணியாளர்களுடன் இயங்கும்.இந்த விடுமுறைக்கு ஈடாக மார்ச் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment