மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* பெண் பயணிகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
* உள்ளூர் உணவுகள் பயணிகளுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
* 2020ஆம் ஆண்டுக்குள் ரெயில்வே வருவாயை ரூ4,000 கோடியாக உயர்த்த நடவடிக்கை
* தமிழகம், குஜராத், தெலுங்கானா அரசுகளுடன் இணைந்து புறநகர் ரெயில்களை அதிகரிக்க நடவடிக்கை
* இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் ரெயில்வே ஆட்டோ-ஹப் உருவாக்கப்படும்
* டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு பின்பற்றப்படும்
* சென்னை, ஹைதராபாத், அகமதாபாத்தில் புற நகர் ரெயில் சேவை மேம்படுத்தப்படும்
* ரெயில்வே உணவு மெனுவில் குழந்தைகளுக்கான உணவு, சூடான பால் அறிமுகம்-
* ரெயில் நிலைய மேம்பாட்டின் கீழ் திருப்பதி, நாகபட்டினம், ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
* பட்ஜெட்டில் பயணிகள் - சரக்கு கட்டண உயர்வு இல்லை, புதிய ரெயில் அறிவிப்புகள் இல்லாத ரெயில்வே பட்ஜெட்
No comments:
Post a Comment