ராணுவத்திற்கு மதுரையில் ஆள்சேர்ப்பு : நவ.,11 - 16 வரை நடக்கிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 16, 2016

ராணுவத்திற்கு மதுரையில் ஆள்சேர்ப்பு : நவ.,11 - 16 வரை நடக்கிறது

இந்திய ராணுவத்திற்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ., 11-16ம் தேதி வரை ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட 11 மாவட்டத்தினர் பங்கேற்கலாம். இதற்கான
விண்ணப்பங்கள் ஆன்லைனில் www.joinindianarmy.nic.in வரவேற்கப்பட்டன. அவர்களுக்கு அனுமதி அட்டை அக்., 28ம் தேதி முதல் இமெயில் மூலம் வழங்கப்படும். தேவையான கல்வி சான்றிதழ்கள் மற்றும் அச்சிடப்பட்ட அனுமதி அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ராணுவத்தில் சேர்த்து விடுவதாக கூறி பணம் பறிக்க முயலும் போலி ஏஜென்ட்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தவறான தகவல்கள் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ அமைச்சகம் எச்சரித்து உள்ளது.

No comments:

Post a Comment