2016ம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகள் பகிர்ந்துகொள்வதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் தலைசிறந்த பரிசான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, முதலில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று (அக்.,3) அறிவிக்கப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் யோஷினேரி ஓஷிமி, இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. அதில், அமெரிக்காவைச் சேர்ந்த தவுலஸ், ஹால்டின் மற்றும் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு, இயற்பியல் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாளை வேதியியலுக்கான நோபல் பரிசும், வரும் 7ம் தேதியன்று அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகிறது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வரும் 10ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment