அரசு நடத்தும், 'இ - சேவை' மையத்தில் மனு அளிப்போருக்கு, அவர்களது மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக, 14 திட்டங்களுக்கு மட்டும், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலத்தில் உள்ள, 10 ஆயிரம் இ - சேவை மையங்களில், அரசு வழங்கும், 100 சேவைகளுக்கான சான்றுகள் மற்றும் ஒப்புதல் ஆணைகள் தரப்படுகின்றன. தற்போது மனுதாரர்கள், அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா; நலத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்ததா என்பதை அறிய, சேவை மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் சிரமத்தை குறைக்க, எஸ்.எம்.எஸ்., என்ற குறுஞ்செய்தி வாயிலாக, மனுதாரர்களுக்கு தகவல் அனுப்பும் திட்டம், நேற்று துவக்கப்பட்டது. இதன்படி, மனு குறித்த தகவல்கள், உடனுக்குடன் அனுப்பப்படும். முதல் கட்டமாக, பிறப்பிடம், இருப்பிடம், ஜாதி, வருமான சான்றுகள் மற்றும் திருமண உதவி உள்ளிட்ட, 14 திட்டங்கள், இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக, மனுதாரர்களிடம் மொபைல் எண்கள் பெறப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment