வாசிப்பதன் மூலம் நேசிப்பை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் உருவாக்கு வதாகவும், இந்த நாளிதழை பொக்கிஷமாக பாதுகாக்க இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் உடுமலை அரசுப் பள்ளி மாணவிகள்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, தளி சாலையில் செயல்பட்டு வருகிறது பாரதியார் நூற்றாண்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.
உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் இப்பள்ளி மேம் பாட்டுக்காக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ‘நாப்கின்’ இயந்திரமும், பயன்படுத் திய நாப்கினை சுகாதாரமான முறையில் எரியூட்டி அகற்றும் இயந்திரமும் அண்மையில் இப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
மேலும், இப்பள்ளி மாணவி களிடையே செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தேர்ந்தெடுக்கப் பட்ட 100 மாணவிகளுக்கு, 6 மாதங் களுக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வழங்க இச்சங்கத்தினர் முடிவு செய்து, அதற்கான விழாவுக்கு ஏற்பாடு செய்தனர்.
இதன் தொடக்க விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியை சி.விஜய லட்சுமி தலைமை வகித்தார். தேஜஸ் ரோட்டரி சங்கத் தலைவர் பி.கே.குமரன் வரவேற்றார். சங்கத்தின் பொருளாளர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜன், பள்ளி ஆசிரியர் ஆர்.பழனிச்சாமி ஆகியோர் வாசிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
ரோட்டரி சங்க இயக்குநர்கள் எஸ்.சக்ரபாணி, ஜி.கணேஷ்குமார், எஸ்.நாகராஜன், சத்யம் பாபு, மணிகண்டன், உதவி தலைமை ஆசிரியர் சி.சிவக்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கருத்துரை வழங்கிய பலரும் ‘‘தி இந்து தமிழ் நாளி தழ் மாறுபட்ட தன்மையுடன், அனைவரும் விரும்பிப் படிக்கும் நாளிதழாக உள்ளது.
படிக்க மட்டுமின்றி பாதுகாக்க வேண்டிய இதழ் இது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு மிக வும் பயனுள்ளதாக உள்ளது’’ என்றனர்.
‘தி இந்து’ பொக்கிஷம்
இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, ‘‘6 மாதங்களுக்கான சந்தா தொகையை செலுத்தி ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் எங்க ளுக்கு கிடைக்கச் செய்த தேஜஸ் ரோட்டரி சங்கத்தினருக்கு மன மார்ந்த நன்றி. இதனை வாசிக் கும்போது ஏற்படும் நேசிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை. ‘தி இந்து’ எங்களுக்குக் கிடைத்த பொக்கிஷமாகவே கருதுகிறோம். ‘உங்கள் குரல்’ பகுதி மூலம் இனி எங்கள் குரலும் தொடர்ந்து ஒலிக்கும். தொடர்ந்து வாசிப்ப தோடு, பலருக்கும் வாசிக்கக் கொடுப்போம்’’ என்றனர்.
No comments:
Post a Comment