உள்ளாட்சி:வேட்புமனு தாக்கல் முடிந்தது! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 3, 2016

உள்ளாட்சி:வேட்புமனு தாக்கல் முடிந்தது!

இன்று மாலை 5 மணியோடு உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருப்பவர்களின் 5 ஆண்டுகள் பதவிக்காலம், வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான

தேர்தல்கள் வரும் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 26ஆம் தேதியன்று தொடங்கியது. அதன்படி, கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களும், சுயேட்சையாக களமிறங்கும் வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை ஆர்வமுடன் தாக்கல் செய்து வந்தனர். நேற்று மாலை வரை உள்ளாட்சிப் பதவிகளில் போட்டியிட இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 352 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இன்றே கடைசி நாள் எனும்நிலையில் பெரும்பாலான கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை நேற்றும் அறிவித்தநிலையில் பெரும்பாலானவர்கள் இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்தனர். நாளை வேட்புமனுக்கள் பரீசிலனையும், 6ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெறும் தேதியாகவும் உள்ளது. முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் 19ஆம் தேதியும் நடக்கிறது.

No comments:

Post a Comment