ஜூலை 17-ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 7, 2017

ஜூலை 17-ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு


குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அதேசமயம், அரசியல் கட்சிகளும், குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.


இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து, குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடர்பாக ஜூன் 14-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்படும். அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஜுன் 28-ம் தேதி கடைசி நாள். வேட்பு மனுக்கள் 29-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசிநாள் ஜூலை 1-ம் தேதி ஆகும்.
அதன்பின்னர் போட்டி இருந்தால் ஜூலை 17-ம் தேதி தேர்தல் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 20-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை, வாக்களிக்க தகுதி உள்ள 50 பேர் முன்மொழிய வேண்டும், 50 பேர் வழிமொழிய வேண்டும். வேட்பாளருக்கு முன்னுரிமை அடிப்படையில் வாக்கு செலுத்த வேண்டும். முதலாவது முன்னுரிமை யாருக்கு? என்பதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அடுத்தடுத்த முன்னுரிமையை குறிப்பிடுவதும் குறிப்பிடாததும் அவரவர் விருப்பம்.
இந்த தேர்தலை நடத்துவதற்காக அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.  நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள். அந்தந்த மாநில சட்டமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கலாம். அவசர காரணங்களுக்காக வேறு இடங்களில் வாக்களிக்க வேண்டும் என்றால் 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடாது. வாக்களிப்பவர்களுக்கு எந்த வகையிலும் லஞ்சமோ பரிச்ப்பொருளோ கொடுக்ககூடாது.
இவ்வாறு அவர் கூறினார்



No comments:

Post a Comment