கற்றலும் கற்பித்தலும்
இவ்வாண்டு இனிதே
அமைய வாழ்த்துக்கள்
குறித்த நேரத்தில் பள்ளி செல்வோம், குறித்த நேரத்திற்குப் பிறகே பள்ளியை விட்டு வெளியேறுவோம்.
உரிய விடுப்பினை, உரிய விண்ணப்பத்தில், உரிய நேரத்தில், உரியவரிடம் அளித்த பின்னரே விடுப்பில் செல்வோம்.
நம்மிடமிருந்து ஏதேனும் ஒரு நற்பண்பினை நம் மாணவன் பின்பற்றும் அளவிற்கு ரோல்மாடலாய்த் திகழ்வோம்.
பணிக் கலாச்சாரத்தை மேம்படுத்துவோம்.
மாணவர்களே நமக்கு எசமானர்கள், ஏனெனில் அவர்கள் இல்லையெனில் நம் பணியிடம் இல்லை.
இக்கல்வியாண்டில் நம் கற்பித்தல் பணியும், நம் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளும் மேன்மையடைய வாழ்த்துக்கள்.
மாணவர்கள் மகிழ்ச்சியாய் கற்றிட
நம் செயல்களும்
தேடல்களும்
தொய்வின்றி தொடரட்டும்...
சிந்தியுங்கள்
புதிய பார்வைகள் தோன்றும்
புதிய பார்வைதான்
புதிய செயலுக்கு முதற்படி...
புதிய கல்வியாண்டில்
வளமான சமுதாயம் அமைப்போம்...
புதிய கல்வியாண்டு
புதிய இலக்கு
புத்துணர்ச்சியுடன்
புதுமை சாதிப்போம்🌻
.
No comments:
Post a Comment