ஓ.பி.சி. வகுப்புனரில் உட்பிரிவுகளை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவரை குடியரசு தலைவர் நியமித்து உத்தரவு
ஓ.பி.சி. வகுப்புனரில் உட்பிரிவுகளை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரோகிணியை குடியரசு தலைவர் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
குழுவின் உறுப்பினராக ஜே.கே.பஜாஜை நியமித்து ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஓ.பி.சி. வகுப்பினர் தெரிவிக்கும் குறைகளை குழு ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை அளிக்கும் என்றும், குழு தனது பரிந்துரைகளை குடியரசு தலைவருக்கு 12 வார காலத்திற்குள் அளிக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment