"சமவேலைக்கு சம ஊதியம் " - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 25, 2017

"சமவேலைக்கு சம ஊதியம் "


"சமவேலைக்கு சம ஊதியம் "
-உச்ச நீதிமன்ற தீர்ப்பும் 2003-2006

தொகுப்பூதிய ஆசிரியர்கள் வழக்கும்

மேல்முறையீட்டு 213 of 2013வழக்கு  2 உச்ச
 நீதிமன்றம் நீதிபதிகள்
 அமர்வு தீர்பாணை

    🔥உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் 26 அன்று, ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் ஏ.எஸ். காதர், எஸ்.ஏ. போப்டே ஆகியோர் கொண்ட பெஞ்ச், வழங்கிய தீர்ப்பில்
🔴 அரசுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த, தினக்கூலி, தற்காலிக தொழிலாளர்கள் சமவேலைக்கு சமஊதியம் பெற தகுதிபடைத்தவர்கள்;
🔵அவர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள்.

🛑அந்த தீர்ப்பில் ஒரு துறையில் தற்காலிகமாகவோ, ஒப்பந்த முறையிலோ பணியாற் றும் ஊழியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் பெற தகுதிபடைத்தவர்கள்; இதை அனைத்துத் துறைகளிலும் கடைப்பிடிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

♻“ஒரு நிறுவனத்தில் ஒரே தன்மைவாய்ந்த பணியில் நிரந்தர தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தை, அதே பணியில் ஈடுபடும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அளிக்க மறுப்பதானது அடிமைத்தனமாக கருதப்படும்;
 💢அடிமைத்தனம் மட்டுமல்ல, ஊழி
யர்களை அடக்கி ஆளுதல், சிறுமைப்படுத்து தல் போன்றவைகளாகக் கருதப்படும்; தொழி
லாளர் நலன் விரும்பும் மாநிலங்கள் சமவேலைக்கு சம ஊதியம் என்பதை அனைத்துத்
துறைகளிலும் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

✳நீதிபதி ஜே.எஸ். காதர் குறிப்பிடும் போது, “எந்த ஒரு தொழிலாளியும் ஒரே நிறுவனத்தில் ஒரே தன்மை வாய்ந்த பணியில் ஈடுபட்டு அதே பணியைச் செய்யும் ஒரு தொழிலாளர் பெறும் ஊதியத்தை விட குறைந்த ஊதியத்தில் பணியாற்ற முன்வருவதில்லை; விரும்பவும் மாட்டார்கள்.
🚩ஆனால் நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்ற நிர்ப்பந்திக்கின்றன. ஒரு தொழிலாளி தன்னையும், தன்னைச்சார்ந்த குடும்பத்தார்க்கும் உணவு அளித்து உயிர் வாழ வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் தனது கௌரவம், சுயமரியாதையை இழந்தே
குறைந்த கூலியைப் பெற்று பணியாற்று கின்றார்கள்” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

⚫ஒரே தன்மை வாய்ந்த பணியில் ஈடுபடு கின்றவர்களுக்கு மாறுபட்ட கூலியை வழங்கு
வது என்பது உழைப்புச் சுரண்டலும், தொழிலாளியை அடக்கி வைப்பதும், அடிமைப் படுத்தும் செயலும் ஆகும் என்றும், இது முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

💙பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்ங்களில் அரசுத்துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் அரசு நிறுவனத்தில் பணியாற் றும் நிரந்தர ஊழியர்களுக்கு அளிக்கும் ஊதியத்தை -அதாவது சமவேலைக்கு சமஊதி யம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.
❤இவ்வழக்கில், பஞ்சாப் உயர்நீதி மன்றம், ஒரே தன்மை வாய்ந்த பணியில் பணியாற்றுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற் காக சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டியதில்லை என்ற தீர்ப்பினை வழங்கியது.

🌺பஞ்சாப் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரத்துசெய்து மேற்கண்ட சிறப்புமிகுந்த தீர்ப்பினை அளித்தனர்.
❇ “தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் அளித்திட வேண்டும். இதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
👍வேலை நிறுத்தம், போராட்டங்கள் மேற்கொள்வதன் முக்கியக்காரணமே தாங்கள் கௌரவமுள்ளவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத் தான்” என்று நீதிபதி கள் சுட்டிக் காட்டினர்.

🔥மேலும் தங்களது தீர்ப்பில், “சமூக பொருளாதார கலாச்சாரம் சம்பந்தமாக 1966 ஆம்
ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையொப்பமிட்டுள்ள காரணத்தால் ஒப்பந்த விதிகளை மீறாமல் அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
🔵 இவைகளின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி சமவேலைக்கு சம ஊதி யம் என்ற விதி, எல்லா தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒரே தன்மைவாய்ந்த பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்” என்றும் தீர்ப்பில் கூறினர்.

🍀"சமூக, பொருளாதார, கலாச்சார சம்பந்தமான சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையொப்பமிட்டு அது 1979- ஆம் ஆண்டு  ஏப்ரல் 10- ஆம் நாள் முதல் அமலுக்கு வந்த
நிலையில் அந்த விதியை அமல்படுத்துவ திலிருந்தே இந்தியா விலகி நிற்க முடியாது,
🖤அது மட்டுமல்லாமல் சட்ட விதிகளில் பல்வேறு விளக்கங்கள் இருந்தாலும், இந்திய அரசியல் அமைப்பு விதி 14 இல் சமவேலைக்கு சமஊதியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில் இரு வேறுகருத்துகளுக்கு இடமேயில்லை.

🔥 ஊழியர் களில் நிரந்தர பணியாளரா, தற்காலிக பணியாளரா என்ற வேறுபாடுகிடையாது. ஊதியம் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்” என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment