பல கோடி பயனீட்டாளர்களின் நீண்ட கால கோரிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது நிறைவேற்றியுள்ளது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 28, 2017

பல கோடி பயனீட்டாளர்களின் நீண்ட கால கோரிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது நிறைவேற்றியுள்ளது

சர்வதேச அளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் சமூகவலை தளங்களுள் வாட்ஸ் அப் செயலி முக்கியபங்குவகிக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் கிட்டதட்ட அனைவருமே வாட்ஸ் அப் செயலியையும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் இன்றி, 256 பேர் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி அதன் மூலமும் அவர்களுக்கும் செய்திகளையும், தகவல்களையும் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் தவறான தகவல்களையோ அல்லது தவறான குழுவிற்கு வேறு செய்தியையோ, தகவலையோ மாற்றி அனுப்பிவிட்டால் அதனை நீக்கும் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் நாம் அனுப்பும் தகவலை மற்றவர்கள் படிக்கும் முன்னதாக அதனை நீக்கும் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்துவந்தனர். 
இந்நிலையில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் கோரிக்கையை நீண்ட நாட்களாக பரிசீலித்துவந்த வாட்ஸ் அப் நிறுவனம் வாட்ஸ் அப்பில் அனுப்பும் செய்திகளை நிரந்தரமாக நீக்கும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பில் நீங்கள் யாருக்காவது தவறான செய்தியை அனுப்பிவிட்டால் அதனை அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் டெலீட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் வாடிக்கையாளர் அனுப்பும் செய்தியை பெறும் நபரும் லேட்டஸ்ட் அப்டேட் செய்திருந்தால் மட்டுமே நீங்கள் நீக்கும் செய்தியோ தகவலோ நீக்கப்படும் இல்லையென்றால் அந்த செய்தியை நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அந்த நபர் அதனை பார்த்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
செய்தியை நீக்கும் முறை: 
நீக்கள் அனுப்பிய செய்தியின் மீது நீண்ட அழுத்தம் கொடுத்தால் அதில் “Delete for me and Delete for everyone" என்ற ஆப்ஷன் வரும். அதில் Delete for everyone என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் அனுப்பிய தவறான அல்லது தேவையில்லாத செய்தியை நீக்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment