ஜாக்டோ ஜியோ பத்திரிக்கை செய்தி நாள் 3.12.2018 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 3, 2018

ஜாக்டோ ஜியோ பத்திரிக்கை செய்தி நாள் 3.12.2018

ஜாக்டோ ஜியோ பத்திரிக்கை செய்தி நாள் 3.12.2018
நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க மறுப்பு
பொதுநலவழக்கு தாக்கல் செய்த அமைப்பிற்கு இந்த விஷயத்தில் தலையிட
உரிமையில்லை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்
அடிப்படையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கைகள் மீது எடுத்த
நடவடிக்கை குறித்து தமிழக அரசு எழுத்துபூர்வமான அறிக்கை தாக்கல் செய்ய
உத்தரவு
வரும்10 தேதிவரை காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தினை
ஒத்திவைக்க நீதிபதிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வேலைநிறுத்தப்
போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
தமிழகத்திலுள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள்-அரசுப் பணியாளர்களின்
கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பின்வரும் ஏழு
அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட-
வலியுறுத்தி 4.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் நடத்துவதென
முடிவு செய்து அரசுக்கு உரிய நோட்டீஸ் கொடுத்தது
இது தொடர்பான பொதுநல வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு
வந்தது மேலும், தற்போதைய வழக்கோடு ஏற்கனவே ஜாக்டோ ஜியோ கடந்த ஆண்டு.
மேற்கொண்ட செப்டம்பர் மாத காலவரையற்ற வேலைநிறுத்தம் வழக்கும் சேர்ந்த இணைத்துக்
கொண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது இந்த பொதுநல வழக்கினை தாக்கல் செய்த அமைப்பினருக்கு ஆசிரியர்கள்,
அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கும் அமைப்புகளுக்கும்
இடையே குறுக்கீடு செய்ய அனுமதிக்க முடியாது என்று கண்டனம் தெரிவித்தனர்.
நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்தவிருக்கும் காலவரையற்ற
வேலைநிறுத்தப் போராட்டடத்திற்குத் தடை விதிக்க மறுத்து விட்டது
கடந்த ஆண்டு செம்டம்பர் மாதத்தில் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப்
போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளின் மீது
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான எழுத்துப் பூர்வமான அறிக்கையினை வரும்
10 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தமிழக அரசுக்கு
ஆணையிட்டது.
நீதிபதிகள் தமிழக அரசு அறிக்கையினை தாக்கல் செய்யும்வரை, அதாவது டிசம்பர் 10
வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை ஒத்திவைப்பதற்கு ஜாக்டோ ஜியோ
நிர்வாகிகள் உறுதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அடுத்து
வழக்கு விசாரணைக்கு வரும் நாளாக டிசம்பர் 10 ஆம் தேதி வரை காலவரையற்ற
வேலைநிறுத்தப் போராட்டத்தினை ஒத்திவைப்பதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் சம்மதம்
தெரிவித்தனர்
ஜாக்டோ ஜியோ அடுத்த கட்ட நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக நாளை
திருச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழுத் தலைவர்களின் கூட்டத்தினை
ஏற்பாடு செய்துள்ளனர்.
இவண்
ஒருங்கிணைப்பாளர்கள்
ஜாக்டோ ஜியோ

No comments:

Post a Comment