பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வுத் துறை அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 19, 2014

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வுத் துறை அறிவிப்பு

பொதுத் தேர்வு எழுதும்போது வழங்கப்படும் பிரதான விடைத்தாள் பக்கங்களை அதிகரித்து மொத்தமாக வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு தேர்வுத்துறை தொடங்கியது. ஆனால், கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது பெரும்பாலான மாணவர்கள் எழுதாத பக்கங்களை அதிகமாக விட்டு விடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதனால்
தேர்வுத்துறைக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து விடைத்தாளின் பக்கங்களை குறைக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூற¤யிருப்பதாவது:
வரும் 2015ம் ஆண்டு நடக்க இருக்கும் பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு 40 பக்கங்களுக்கு பதிலாக 32 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்கப்பட வேண்டும். விலங்கியல், தாவரவியல் பாடத் தேர்வுக்கு 52 பக்கங்களுக்கு பதிலாக 44 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்க வேண்டும். கணினி அறிவியல் பாடத்தேர்வுக்கு 40 பக்கங்களுக்கு பதிலாக 32 பக்கங்கள், கணக்கு பதிவியல் தேர்வுக்கு 54 பக்கங்களுக்கு பதிலாக 46 பக்கங்கள், மற்ற பாடங்களுக்கு 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்வில் மொழிப்பாடங்களுக்கு 32 பக்கங்களுக்கு பதிலாக 24 பக்கங்களும் வழங்கப்பட வேண்டும். தமிழ் இரண்டாம் தாளில் இடம் பெறும் ரயில்வே முன்பதிவு மற்றும் ரத்து படிவங்கள், வங்கியில் பணம் செலுத்தும் படிவம், பணம் பெறும் படிவம், ஆகிவற்றை தனித்தனியாக வழங்காமல் முதன்மை விடைத்தாளில் நான்கு பக்கங்களில் அச்சிட்டு வழங்கப்பட வேண்டும். சமூக அறிவியலை பொருத்தவரை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில் இரண்டு இந்திய வரைபடங்கள், ஒரு ஐரோப்பா வரைபடம், ஒரு ஆசியா வரைபடம், அச்சிட்டு வழங்கப்பட வேண்டும். கணிதம், அறிவியல் பாடங்கள் முன்பு இருந்தபடியே 30 பக்கங்கள் வழங்கப்பட்டாலும், முதல் பக்கத்தில் கேம்ப் எண், பண்டல் எண், பாக்கெட் எண் போன்ற விவரங்கள் இடம் பெறும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment