அரசு ஊழியர்களுக்கான முன்னோடி பயிற்சிக்கு தமிழ்நாடு தேர்வு. மத்திய அரசாங்கம் உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 18, 2014

அரசு ஊழியர்களுக்கான முன்னோடி பயிற்சிக்கு தமிழ்நாடு தேர்வு. மத்திய அரசாங்கம் உத்தரவு.

அரசு ஊழியர்களுக்கான முன்னோடி பயிற்சிக்கு தமிழ்நாட்டை, மத்திய அரசாங்கம் தேர்வு செய்துள்ளது.தீவிர மாவட்ட பயிற்சிமத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் அரசுப் பணியாளர்களின் திறனை வளர்க்கும் பொருட்டு பயிற்சிகள் நடத்த தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகிறது. இதுதவிர, தமிழ்நாடு அரசும் நிறைய பயிற்சிகளை
அளிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பல துறைகள் அவற்றைச் சார்ந்த பணியாளர்களுக்குப் பிரத்யேகமாகப்

பயிற்சி அளிக்க நிறுவனங்களை அமைத்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீவிர மாவட்டப் பயிற்சி என்கிற திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டத்தின் மூலம், தமிழகத்தில் முதல் கட்டமாக பயிற்சி வழங்க விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 2 ஆயிரம் பணியாளர்களுக்கு அலுவலக நடைமுறை குறித்த மூன்று நாள் பயிற்சியும், 500 பணியாளர்களுக்குக் கணினிப் பயிற்சியும், ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது. முறையாக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டதா? என்பதை ஆய்வு செய்த மத்திய அரசு, தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட இந்த பயிற்சியின் தரம் குறித்து திருப்தியடைந்து, அடுத்த கட்டத்தில் இப்பயிற்சியை நடத்த தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சீபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கியது. இப்பயிற்சி தற்சமயம் அம்மாவட்டங்களில் செவ்வனே நடந்து வருகிறது.அறிமுக பயிற்சிபுதிதாக பொறுப்பேற்ற பா.ஜ.க. அரசு, அரசு பணியில் புதிதாகச்சேர்ந்த ‘ஆ’ பிரிவு, ‘இ’ பிரிவு அலுவலர்களுக்கு அறிமுகப் பயிற்சியை நடத்த முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசாங்க பணியாளர் துறையைத் சார்ந்த உயர் அதிகாரிகள் ராஜேஷ் ஆர்யா, வி.கே.சின்ஹா, சீமா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் காஞ்சீபுரத்தில் தீவிர மாவட்டப் பயிற்சி பற்றிய ஆய்வை பயிற்சி பெற்ற அலுவலர்களுடன் கலந்துரையாடி மேற்கொண்டனர். அவர்கள் இப்பயிற்சி தமிழ்நாட்டில் திறம் பட செயல்படுவது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். அறிமுகப்பயிற்சியை இந்திய அளவில் நடத்துவதற்கு மூன்று மாநிலங்கள் மத்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இது பரிசோதனை முயற்சியாக நடத்தப்படும். பிறகு ஆய்வின் அடிப்படையில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும்.12 நாள் பயிற்சி இந்த பயிற்சி ஐந்து மாவட்டங்களில் முதற்கட்டமாக நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 1000 பணியாளர்கள் முக்கியமான துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு 12 நாள் பயிற்சி நடத்தப்படும். கள ஆய்வுகளும் இப்பயிற்சியின் மூலம் மேற்கொள்ளப்படும். கோப்புகளை கையாளுபவர்கள் அத்துறையில் களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கும், பொது மக்களிடம் மன எழுச்சியோடும், உற்சாகத்தோடும் பழகிப் பணியாற்றுவதற்கும், சிறப்பாக நேர மேலாண்மை செய்வதற்கும் தேவையான தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளும் அடிப்படையில் இப்பயிற்சி கட்டமைக்கப்படும். படைப்பாக்கத் திறன், மன நிலை மாற்றம், தகவல் தொடர்புத்திறன், முடிவெடுத்தல் ஆகியவற்றிலும் இவர்கள் திறன்கள் மெருகேற்றப்படும். பொதுமக்களுடைய தேவைகளை உணர்ந்து அன்போடும், புரிதலோடும் ஊழியர்கள் பணியாற்றுவதற்குத் தேவையான தன்னம்பிக்கை உரைகளும் இப்பயிற்சியில் வழங்கப்படும். பணியில் சேர்ந்த முதல் இரண்டு, மூன்று ஆண்டுகளுக் குள் இப்பயிற்சி வழங்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் பவானிசாகர் குடிமைப் பயிற்சி நிலையத்தில் பணியில் புதிதாகச் சேர்ந்த உதவியாளர்களுக்கும், இளநிலை உதவியாளர்களுக்கும் ஆதாரப் பயிற்சி வழங்கப்படுகிறது. எனவே, இந்தப் பயிற்சியை அலுவலக நடைமுறைகளைத் தாண்டி பொதுமக்களோடு பழகுவது, துறை சார்ந்த நேர்வுகளில் நிபுணத்துவம் பெறுவது ஆகியவற்றிற்குப் பயன்படுத்துவது ஏற்றது என்ற கருத்து அண்ணா மேலாண்மை நிலையத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மத்திய அரசாங்கம் வழங்கும். தமிழ்நாடு தேர்வுஇதுதொடர்பான கருத்தறியும் கூட்டம் சனிக்கிழமை அன்று புதுடெல்லியில் பணியாளர் துறை சார்பாக நடைபெற்றது. இதற்கு மத்திய அரசின் பணியாளர் துறை செயலர் சஞ்ஜய் கோத்தாரி தலைமை வகித்தார். முன்னோடிப் பயிற்சி நடத்தப்பெறும் மாநிலங்களிலிருந்து அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது தமிழ்நாட்டில் எல்லாப் பணியாளர்களுக்கும் பவானிசாகர் குடிமைப் பயிற்சி நிலையத்தின் மூலம் ஆதாரப் பயிற்சி அளிக்கப்படுவதையும். ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர்களுக்கு சென்னையில் 21 நாட்கள் ஆதாரப் பயிற்சி நடத்தப்படுவதையும், தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு தலைமைச் செயலகத்திலேயே ஆதாரப் பயிற்சி நடத்தப்படுவதையும் கூட்டத்தில் கலந்து கொண்டு அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனர் இறையன்பு எடுத்துக் கூறினார். தற்சமயம் பவானி சாகரில் ரூ.36 கோடியே 23 லட்சம் செலவில் புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதையும், திருச்சி, மதுரை, சேலம் ஆகிய மூன்று இடங்களில் வட்டாரப் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டிருப்பதையும் தெரிவித்தார். இந்த பயிற்சியின் மூலம் மக்களுக்கு நேரடியாக சேவையாற்றும் துறைகளைச் சார்ந்த அலுவலகப் பணியாளர்கள் களத்தில் என்ன நடக்கிறது என்பதை உணர்வது அவர்கள் ஈடுபாட்டைக் கூர்மைப்படுத்தும் என்று அவர் கூறினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, தமிழ்நாடு பயிற்சிக்காக செலுத்தும் சிறப்புக்கவனம் பாராட்டப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பயிற்சி விரைவில் உரியபெயருடன் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது

No comments:

Post a Comment