அலைகழிக்கப்படும் முதுகலை பட்டதாரி விண்ணப்பதாரர்கள் .. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 17, 2014

அலைகழிக்கப்படும் முதுகலை பட்டதாரி விண்ணப்பதாரர்கள் ..

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் விண்ணப்ப தாரர்களிடம், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலக தரப்பில் கூடுதலாக ஒரு காப்பி ஜெராக்ஸ் கேட்கப்படுகிறது. இதுகுறித்த விவரத்தை விண்ணப்பம் பெறும் போதே தெரிவிக்காததால், ஒரு ரூபாய் மதிப்புள்ள

ஜெராக்ஸ் எடுக்க ரூ.20 வரை ஆட்டோவுக்கு செலவழிக்க வேண்டியுள்ளதாக விண்ணப்பதாரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் முது கலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 ஆகிய பதவியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படு கின்றன. இப்படிவங்கள் அனைத் தும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்ப விநியோகம் வரும் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.50. தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தபால் அல்லது கொரியர் மூலமாக அனுப்பக்கூடாது. மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு நேரில் வந்துதான் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், இந்த விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஓ.எம்.ஆர் படிவத்தை ஒரு காப்பி நகல் (ஜெராக்ஸ்) எடுத்து சமர்ப்பித்தால் போதும் என விண்ணப்பப் படிவத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால், விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க செல்லும் போது, அங்குள்ள ஊழியர்கள் ஒஎம்ஆர் படிவத்தை மேலும் ஒரு காப்பி நகல் எடுத்துக் கொடுத்தால்தான் படிவத்தை பெறுவோம் எனக் கூறுகின்றனர். திருவள்ளூரில் உள்ள மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகம், மெயின் ரோட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உட் பகுதியில் அமைந்துள்ளது. இதனால், விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வரும் விண்ணப்ப தாரர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து, விண்ணப்ப தாரர்கள் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘விண்ணப்பப் படிவத்தை வாங்கும்போதே கூடுதல் நகல் வேண்டும் என்று தெரிவித்தால் ஒஎம்ஆர் படிவத்தை கூடுதலாக ஒரு காப்பி ஜெராக்ஸ் எடுத்து வந்து விடுவோம். ஆனால், அப்போது கூறாமல் சமர்ப்பிக்க வரும்போது தெரிவிக்கின்றனர். இதனால், விண்ணப்பதாரர்கள் ஜெராக்ஸ் எடுக்க அங்கிருந்து 2 கி.மீட்டர் தூரம் சென்று எடுக்க வேண்டியுள்ளது. ஒரு ரூபாய் ஜெராக்ஸ் எடுக்க ஆட்டோவுக்கு ரூ.20 செலவழிக்க வேண்டியுள்ளது. இத்தகைய சிரமங்களை தவிர்க்க டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிப்பது போன்று ஆசிரியர் தேர்வு வாரியமும் அறிமுகப்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர். இதுகுறித்து, மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலக ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘‘தொடக்கத்தில் விண்ணப்பங்களை விற்பனை செய்யும் போது இந்த விவரத்தை தெரிவிக்க மறந்து விட்டோம். தற்போது, இதுகுறித்த விவரத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட்டுள்ளோம்’’ என்றார்.

No comments:

Post a Comment