பள்ளி மாணவர் மூலம் நோய் விழிப்புணர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 17, 2015

பள்ளி மாணவர் மூலம் நோய் விழிப்புணர்வு

பள்ளி மாணவர் உதவியுடன், தொற்று நோய் குறித்து, மக்கள் இடையே, விழிப்புணர்வு ஏற்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க, பள்ளி மாணவர்கள் மூலம், அவர்களின் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள், நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.இதற்காக, சுகாதார உறுதிமொழி விண்ணப்பப் படிவம் தயார் செய்யப்பட்டு உள்ளது.

           இதை மாணவர்களிடம் வழங்கி, அவர்களின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரும்படி வலியுறுத்தப்படுகிறது.இதன் மூலம், அப்படிவத்தில் உள்ள கருத்துகளை, மாணவர்களும், பெற்றோரும் அறிந்து கொள்வர். அவர்களும் சுகாதார நடவடிக்கையில் ஈடுபடுவர் என, உள்ளாட்சி அதிகாரிகள் நம்புகின்றனர்.எனவே, தமிழகம் முழுவதும், இப்பணியை மேற்கொள்ள, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment