உதவித்தொகை திட்டம் ரத்து; மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 24, 2015

உதவித்தொகை திட்டம் ரத்து; மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தேசிய தகுதித்தேர்வு அல்லாத உதவித்தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைக்கழக மானியக்குழு அலுவலகத்தில் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள், கைது செய்யப்பட்டனர்.

தேசிய தகுதித்தேர்வு அல்லாத உதவித் தொகை, நாடு முழுவதும், மத்திய பல்லைக்கழகங்களில், ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு, வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம், எம்.பில்., மாணவர்களுக்கு, மாதந்தோறும், 5,000 ரூபாயும், பிஎச்.டி., ஆராய்ச்சியாளர்களுக்கு, மாதந்தோறும், 8,000 ரூபாயும் கிடைத்தது; இதை, யு.ஜி.சி., ரத்து செய்துள்ளது.

யு.ஜி.சி.,யின் நடவடிக்கையை கண்டித்து, டில்லியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள், யு.ஜி.சி., அலுவலகத்தில் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment