புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 16, 2015

புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை

பள்ளி மாணவர்கள், அளவுக்கு அதிகமான எடையுள்ள புத்தக பைகளை சுமந்து செல்வதை குறைக்க, மாநில கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி துறை டி.எஸ்.இ.ஆர்.டி., விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

கடந்த 2013ல், மைசூரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான, &'பிரதாம்&' ஆய்வு நடத்திய போது, பள்ளி சிறுவர்கள், 10 கிலோ எடையுள்ள புத்தக சுமையை துாக்கி செல்வது தெரியவந்தது. அதாவது, 2006 குழந்தைகள் புத்தக பை சட்டத்தின் படி குழந்தையின் உடல் எடையில், 10 சதவீதத்துக்கு மேல் புத்தக பை எடை இருக்க கூடாது. சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்றம், மஹாராஷ்டிராவில் பள்ளி சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தக பை சுமையை குறைக்க உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பெங்களூரில், டி.எஸ்.இ.ஆர்.டி., அமைத்த எட்டு குழுவினர், கடந்த 8ம் தேதி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில் ஆய்வு செய்தனர். இது, மாநில அரசு மற்றும் மத்திய மனிதவள வளர்ச்சி துறை உத்தரவால் எடுக்கப்பட்ட ஆய்வாகும். தற்போது செய்துள்ள ஆய்வு தகவல்கள், மாநில முழுவதும் பொருந்தும்.

டி.எஸ்.இ.ஆர்.டி., இயக்குனர் ஜெயகுமார் கூறுகையில், தற்போது எழுந்துள்ள ஆய்வின்படி புத்தக சுமை எடையை குறைக்க எடுக்கப்படும் முடிவுகள், இன்னும் ஒரு மாதத்தில் தெரியவரும். அதன் பின், நாங்கள் தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கும், என்றார்.

No comments:

Post a Comment