பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய காந்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மழலையர் நலன் மற்றும் பராமரிப்பு கல்விக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்குட்பட்ட இப்பட்டயப்படிப்புக்கு பிளஸ், 2தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு நிர்ணயம் செய்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தவர்கள் அங்கன்வாடி, பால்வாடி,மழலையர் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற முடியும்.
ஆண், பெண் இருபாலரும் சேர்த்துக் கொள்ளப்படுவர். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும். இத்தகவலை, நிறுவன முதல்வர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment