டேக்-ஹோம் சம்பளம் இனி உயர வாய்ப்பு: பி.எஃப். முறையை மாற்ற மத்திய அரசு யோசனை
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்காக மாத வருவாயிலிருந்து ஊழியர்கள் பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதி
12% ரத்து செய்யப்பட வாய்ப்பு.
வருங்கால வைப்புநிதிக்காக சம்பளத்திலிருந்து ஊழியர்கள் பங்களிப்பாக 12% பிடிக்கப்படுவதற்கு சம்பள மட்டத்தில் உச்சவரம்பு நிர்ணயம் செய்ய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணத்திற்கு மாதாந்திர சம்பளம் ரூ.15,000 பெறுபவர்களின் கட்டாயப் பி.எஃப். பிடித்தத்திற்கு ஒரு முடிவு வரும் என்று வரும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமைத்த செயலாளர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கும்போது, “ஒரு குறிப்பிட்ட அளவு சம்பளம் வரை வருங்கால வைப்பு நிதிக்காக ஊழியர்கள் பங்களிப்பாக பிடிக்கப்படும் தொகையை முழுதும் ரத்து செய்யலாம் என்று நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். இதனால் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் அதிகமாகும். எல்லா விதமான சம்பளதாரர்களுக்கும் பி.எஃப் ஒரே அளவில் பிடிக்கப்படுவதால் குறைந்த சம்பளம் வாங்குபவர்கள் அதிக தொகையை பி.எஃப். பிடித்தத்திற்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்றார்.
தற்போது ரூ.15,000 மாத வருமான உடையவர்களின் பி.எஃப். பிடித்தத்தில் ஊழியர்கள் பங்களிப்பு, பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு என்று 24% பிடிக்கப்படுகிறது.
இதனால் ரூ.15,000 மாதச்சம்பளம் பெறுபவர்களின் ஊழியர் பங்களிப்பான 12% பி.எஃப்-க்கு முழு விலக்கு அளித்துவிட்டால் அவர்கள் கூடுதலாக மாதம் ரூ.1800 வரை குடும்பத்துக்கு எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்படும். இதனை வரி விலக்கு ஒப்பானது என்று இந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment