வங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை : வர்த்தம் பாதிக்கும் அபாயம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 21, 2016

வங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை : வர்த்தம் பாதிக்கும் அபாயம்

இந்த வார இறுதியில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. இதனால் வங்கிகள் மூலம் நடத்தப்படும் பணபரிவர்த்தனை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுப்பதில் தட்டுப்படாது ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மார்ச் 24ம் தேதி ஹோலி பண்டிகை, மார்ச் 25ம் தேதி புனிதவெள்ளி, மார்ச் 26ம் தேதி மாதத்தின் 4வது சனிக்கிழமை ( ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுணை விடப்படுவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது), மார்ச் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை.
நிதிஆண்டின் இறுதி வாரத்தில் தொடர்ந்து 4 நாட்கள் வரும் விடுமுறையால், ஆண்டு கணக்கு நிறைவு செய்வதில் தாமத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment