தொலைக்காட்சி, வானொலியில் தேர்தல் பிரசார அனுமதி: தேர்தல் கமிஷன் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 13, 2016

தொலைக்காட்சி, வானொலியில் தேர்தல் பிரசார அனுமதி: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு வரும் மே 16 ஆம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் 6 கட்டங்களாகவும், அசாமில் 2 கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் அரசு தொலைக்காட்சி, அகில இந்திய வானொலியில் தேசிய கட்சிகளும், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளும் தலா 45 நிமிடமும் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை தொலைக்காட்சி நிலையத்திலும், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்திலும் அரசியல் கட்சித்தலைவர்கள் செய்யும் பிரசாரத்தை மாநிலம் முழுவதும் உள்ள பிற நிலையங்களும் ஒலிபரப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment