கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 17, 2016

கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

கோவை அஞ்சல் கோட்டம் மீனாட்சிபுரத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலெக்சின் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை ஒத்தக்கால்மண்டபம் துணை அஞ்சல் அலுவலகத்துக்கு உள்பட்டமீனாட்சிபுரம் கிளை அஞ்சல் அதிகாரி பணிக்கு ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பலாம்.இந்தப் பணிக்கு அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச சம்பள விகிதம்: ரூ.2,745-4,245 மற்றும் அகவிலைப்படி. மேலும், இந்தப் பணிக்கான விண்ணப்பங்களைத் தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலெக்சின் ஜார்ஜ், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், கோவை கோட்டம், கோவை-641001 என்ற முகவரிக்கு தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment