இரு மடங்காகிறது எம்.பி.,க்கள் சம்பளம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 19, 2016

இரு மடங்காகிறது எம்.பி.,க்கள் சம்பளம்

எம்.பி.,க்களின் சம்பளத்தை, 100 சதவீதம் உயர்த்துவதற்கான பரிந்துரைக்கு, அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் சம்பள உயர்வு குறித்து, ஆய்வு செய்த எம்.பி.,க்கள் கமிட்டி, 'சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தலாம்' என, கூறி பரிந்துரைத்தது. இப்பரிந்துரைகளுக்கு,
அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, கேபினட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அடுத்தகட்டமாக, பிரதமர்மோடியின் ஒப்புதல் கிடைத்தால்,நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில், பார்லிமென்ட்டின் அனுமதி பெறப்படும். பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள்:
* எம்.பி.,க்களின் சம்பளம், 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, 1 லட்சம் ரூபாயாக உயரும்
* எம்.பி.,க்களின் பயணப்படி உள்ளிட்ட, பிற செலவுக்கு அளிக்கப்படும் தொகை, இரு மடங்காக உயர்ந்து, 90 ஆயிரம் ரூபாயாகஇருக்கும்
* அவர்களின் அலுவலக செலவு, ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் தொகையும், 100 சதவீதம் உயர்த்தப்படும்* எம்.பி.,க்களின் அரசு இல்லங்களில், மேசை, நாற்காலி போன்ற மரப்பொருட்கள் வாங்குவதற்கான படி, இரு மடங்காக உயர்ந்து, 1.5 லட்சமாக வழங்கப்படும்
* மாதம், 1,700 ரூபாய் மதிப்பில், இலவச 'வை - பை' வசதி
* முன்னாள் எம்.பி.,க்களுக்கு ஓய்வூதியத் தொகை, 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 35 ஆயிரம் ரூபாயாக உயரும்.

No comments:

Post a Comment