தெலங்கானாவில் உள்ள பத்து மாவட்டங்களைப் பிரித்து 21 மாவட்டங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக தெலங்கானா இருந்தது. தெலங்கானா இந்தியாவின் 29வது மாநிலமாக ஜூன் 2, 2014 முதல் செயல்படத் தொடங்கியது. இதன் முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவியேற்றுக்கொண்டார். இந்த
மண்டலத்தில் ஆந்திர மாவட்டங்களான வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப் நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத், மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தும் அடங்கும். தெலங்கானா மாநிலத்தில் 3.5 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். எனவே, மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த முதல்மந்திரி சந்திரசேகர ராவ் முடிவு செய்தார். இந்நிலையில், 1௦ மாவட்டங்கள் மட்டுமே இருந்த தெலங்கானாவில் நேற்று 21 மாவட்டங்கள் புதிய எல்லைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மஞ்சிர்யலா, நிர்மல், கோமூர்பீம் அஷிஷாபாத், ஜகித்யலா, பெத்தபள்ளி, ராஜன்னா சிரிசில்லா, காமாரெட்டி, வரங்கல் அர்பன், வரங்கல் ரூரல், ஜெய்சங்கர் பூபாலப்பள்ளி, ஜனகாம், மெகபூபாபாத், சூரியபேட்டை, மாதாத்ரி, விக்கராபாத், மெகுசல், பத்ரதரி கொத்தகூடம், சங்காரெட்டி , சித்திபேட்டை வனபர்த்தி, நாககர்னூல், ஜோகுலம்மாள் கத்யாலா ஆகிய மாவட்டங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் 91 காவல் நிலையங்கள், 28 புதிய வட்டங்கள், 23 புதிய போலீஸ் உட்பிரிவுகள், 125 புதிய மண்டலங்கள், 25 புதிய வருவாய்த் துறை உட்பிரிவுகள், நான்கு புதிய போலீஸ் ஆணையகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கைப்படி, தெலங்கானாவில் 17 மாவட்டங்கள் மட்டுமே பிரிக்கப்பட இருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக நான்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தெலங்கானாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அனைத்து நலத் திட்டங்களும் சென்று சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. 21 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் விஜயதசமி பெரு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
No comments:
Post a Comment