திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், ''வெப்பச்சலனம் காரணமாக திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழி, கள்ளக்குறிச்சியில் தலா 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தருமபுரியில் 80 மி.மீ., அரூர், அணைக்காரன்சத்திரத்தில் தலா 50 மி.மீ., ஊத்தங்கரை, சேத்தியாதோப்பு, விருத்தாசலத்தில் தலா 40 மி.மீ., உளுந்தூர்பேட்டை, செங்கம், சங்கராபுரம், ஏற்காடு, போச்சம்பள்ளி, நன்னிலம், திருப்பத்தூரில் தலா 30 மி.மீ., வேதாரண்யம், நாகப்பட்டினம், பையூர், நெய்வேலி, பேணுகொண்டாபுரம், மயிலாடுதுறை, வாழப்பாடி, வாணியம்பாடி, காரைக்கால், ஏலகிரி ஆகிய இடங்களில் தலா 20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது'' என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment