தன்னார்வல அரசு பள்ளி ஆசிரியர்கள்  ஒருங்கிணைந்து தொல்காப்பிய முறையில் பாடங்கள் விளக்கும் பயிற்சி பட்டறை நேற்று நடைந்தது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 8, 2017

தன்னார்வல அரசு பள்ளி ஆசிரியர்கள்  ஒருங்கிணைந்து தொல்காப்பிய முறையில் பாடங்கள் விளக்கும் பயிற்சி பட்டறை நேற்று நடைந்தது

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப், பள்ளியில்  தொல்காப்பிய முறையில் பாடங்கள் விளக்கும் பயிற்சி பட்டறை நடைந்தது

பயிற்சிக்கு வந்த அனைவரையும் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஹரிஹரன் வரவேற்றார்.

தொல்காப்பிய பாட பயிற்சி முறையினை முனைவர். திருமதி.மு.கனகலட்சுமி அவர்கள் பயிற்சி அளித்தார்.

பயிற்சியினை அனைவருக்கும் கல்வி திட்டம் மாவட்ட திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு.ஜோதிஸ்வரன்பிள்ளை  பயிற்சினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் திரு.அ.பஷீர் அகமத் பயிற்சியில் தமிழ் எழுத்துகள் எழுதும் முறை பற்றி சிறப்புறையாற்றினார்.

தன்னார்வல அரசு பள்ளி ஆசிரியர்கள்  ஒருங்கிணைந்து தமிழ், ஆங்கிலம் , கணித பாடங்களில் மாணவர்களுக்கு கற்றலில் ஏற்படும் இடர்பாடுகள் அதை களைந்து எளிமையாகவும், கற்றலை ஆர்வத்துடன் படிக்கவும் தமது படிப்பில் சிறந்து விளங்க வைக்கும் தொல்காப்பிய முறையினை அறிந்தனர்.

பயிற்சியில் ஆசிரியர்கள் சங்கர், சரோஜினி, வேலய்யன், எல்லப்பன், விமல்ராஜ், அண்ணாதுரை, சீனிவாசன், ரேவதி, ரேணுகா, ரோஹினி, கவிதா, கனிமொழி, கார்த்திகேயன், மதிக்குமார், தண்டபாணி, மஞ்சுநாதன், குணசேகரன், கோமதி,சவிதா, மோகன சுந்தரம், சார்லஸ் இமானுவேல் மாணவி யாழினி உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் தமிழ் மொழித் திறன், கேட்டல், பேசுதல், வாசித்தல் எழுதும் திறன்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினர்.

பயிற்சிக்கு வந்த அனைவருக்கும் ஆசிரியர் இளையராஜா  நன்றி கூறினார்.

1 comment: