10ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற ஆசிரியர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
வெங்கடேசன் (தமிழ்)
தமிழ் முதல் தாள் செய்யுள், உரைநடைகளை உள்ளடக்கியது. ஒரு மதிப்பெண் வினாக்கள் செய்யுள் பகுதி பயிற்சியில் இருந்து கேட்கப்படும். இரண்டு மதிப்பெண் வினாக்கள், ஏலாதி, திருக்குறள், கம்பராமாயணம், பெரியபுராணம், தமிழ் விடு தூது, தேவாரம், கலித்தொகை
அல்லது நந்திகலம்பகம் ஆகியவற்றில் இருந்தும், உரைநடை பகுதியில் 5 வினாக்களும் கேட்கப்படும். 4 மதிப்பெண் வினாக்கள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீராப்புராணம், நற்றினை அல்லது புறநானா<று ஆகிய பகுதிகளில் இருந்து வினா கேட்கப்படும்.
உரைநடையில் 2, 3, 4, 5, 6, 8 பாடங்களில் இருந்து வினா கேட்கப்படும். 8 மதிப்பெண் வினா, சிலப்பதிகாரம் அல்லது கம்பராமாயணம், திருக்குறள் ஆகியவற்றில் இருந்தும், உரைநடையில் 1, 5 அல்லது 7, 10 வது பாடத்தில் இருந்தும் வினா கேட்கப்படும்.
இரண்டாம் தாளில் இலக்கணம் துணைப்பாடம், கட்டுரை, கடிதம், மொழிப் பயிற்சி கேட்கப்படும். கடிதம் பகுதியில் ஏதேனும் ஒரு வசதி கேட்டு விண்ணப்பம் ( குடிநீர், சாலை, நூலகம்) அல்லது நண்பனை பாராட்டும் கடிதம் வரும். 10 மதிப்பெண் வினாவில் சுற்றுச்சூழல், அன்றாட வாழ்வில் அறிவியல், மழைநீர் சேகரிப்பு, நான் விரும்பும் தலைவர், தேசிய ஒருமைப்பாடு, தூய்மை இந்தியா ஆகியவை தொடர்பாக கேட்கப்படும்.துணைப் பாடப் பகுதியில் மெல்ல மெல்ல மற, குறட்டை ஒலி, அன்றாட வாழ்வில் சட்டம், அண்ணாவின் கடிதம், நூலகம் ஆகியவை முக்கியம்.
லட்சுமண ராவ் (ஆங்கிலம்)
ஆங்கிலம் பாடத்தில் எளிமையாக மதிப்பெண்களைப் பெறலாம். நோட் மேக்கிங், சம்மரி, கடிதம் எழுதுதல், விளம்பரம், ஸ்லோகன், மனப்பாடப் பகுதி பாடல் ஆகியவற்றுக்கு முக்கியத்தவம் தர வேண்டும்.முதல் தாளில், வார்த்தைகள் பயன்பாடு, இலக்கண வினாக்கள், உரைநடை, செய்யுள் மற்றும் மொழிப் பயன்பாடுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
இரண்டாம் தாளில் துணைப்பாடம், மொழி பயன்பாடு, தொடர்பு மொழி திறன், கருத்துகளை விரிவாக்கம் செய்தல், ஒரு இடத்திற்கான வழியை காட்டுதல், ஒரு பொருளுக்கு விளம்பரம் அமைத்தல், படத்தை கொடுத்து அது தொடர்பான 5 வினாக்களுக்கு பதிலளித்தல் ஆகியவை முக்கியம்.உரைநடையில் 1, 3, 5 பாடங்களும், பாடல் பகுதியில் 2, 4, 5 பாடங்களும் முக்கியம். பொதுக் கட்டுரைகளில் முக்கியமாக சுற்றுச்சூழல், குளோபல் வாமிங், தூய்மை இந்தியா ஆகிய கட்டுரைகளை தயார் செய்து கொள்ள வேண்டும்.
தங்கசாமி (கணக்கு)
செய்முறை வடிவியல் பகுதியில் தொடுகோடு வரைதல், வட்ட நாற்கரம் முக்கியம். வரைபடம் பகுதியில் நேர்கோட்டு வரைப்படம் மற்றும் செவ்வக அதிபரவளையம் முக்கியம். இந்த கணக்குகளை போடும் போது, அளவு திட்டம், அட்டவணை, தீர்வு, உண்மை படம் வரைய வேண்டும்.கணங்கள் பாடத்தில் "டி மார்கன்' விதியை பயன்படுத்தி வெண்படம் வரைதல் மற்றும் சார்பு கணக்குகள் அவசியம். அணி பகுதியில் நேர்மாறு அணி, அணிகளை அமைத்தல் ஆகியவை முக்கியம். வடிவியல் பகுதியில் தேல்ஸ் தேற்றம், கோண இரு சமவெட்டி தேற்றம், பித்தாகரஸ் தேற்றம் ஆகியவற்றில் இருந்து கண்டிப்பாக வினா கேட்கப்படும்.ஆயத் தொலைவு வடிவியல் பகுதியில் நாற்கரத்தின் பரப்பு காணுதல், நடுகோட்டின் சமன்பாடு, கொத்துக்கோட்டின் சமன்பாடு, ஒரு கோட்டில் அமையும் புள்ளி ஆகியவை முக்கியம். புள்ளியியல் பகுதியில் திட்ட விலக்கம், மாறுபாட்டு கெழு காணுதல் முக்கியம்.நிகழ்தகவில் நாணயங்கள், பகடை, சீட்டுக்கட்டு ஆகியவற்றை கொண்டு நிகழ் தகவை எளிய முறையில் காணும் முறை ஆகியவை முக்கிய வினாக்களாகும்.
ரவி (அறிவியல்)
வினாத்தாளில் முதல் பகுதியான ஒரு மதிப்பெண்ணில் உயிரியில், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் இருந்து தலா 50 வினாக்கள் கேட்கப்படும்.இரண்டு மதிப்பெண் வினாக்களில் உயிரியலில் 14, வேதியியலில் 8, இயற்பியலில் 8 வினாக்களும் கேட்கப்படும். 5 மதிப்பெண் வினாக்களுக்கு உயிரியலில் 1, 4, 7 பாடங்களும், வேதியியலில் 10, 13ம், இயற்பியலில் 15, 17 ஆகிய பாடங்களும் முக்கியம்.அறிவியல் தேர்வு எழுதும் போது, கணக்கீடுகளுக்கு அளவுகள் அவசியம். தேவைப்படும் கேள்விகளுக்கு வாய்பாடு, மூலக்கூறுகள், வேதியியல் சமன்பாடு, படங்கள் அவசியம்.
இலியாஸ் டேவிட் (சமூக அறிவியல்)
வரலாறு பாடத்தில் 1, 2, 3, 7, 9, 11, 12 ஆகிய பாடங்களும், புவியியலில் 1, 4, 6, 8 பாடங்களும், குடிமையியலில் 1, 2, பாடங்களும், பொருளியலில் 2ம் பாடங்களும் முக்கியம்.
தலைப்பு வினாக்களுக்கு பால்கன் பிரச்னை, பிராங்கிளின் டிரூஸ்லைட், பாசிச கட்சி, அடால்ப் ஹிட்லர், பரம்மசமாஜம், ஜாலியன் வாலாபாத், டாக்டர் அம்பேத்கர், காமராஜ் ஆகியவை முக்கியம்.புவியியலில் வேறுபடுத்திக் காட்டுக பகுதியில் கிரீன்வீச் தீர்க்க நேரம் - இந்திய திட்ட நேரம், மேற்கு தொடர்ச்சி மலை - கிழக்கு தொடர்ச்சி மலை, ஒரு பயிர் மற்றும் - இரு பயிர் சாகுபடி, வேளாண்மை மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள், வானிலை மற்றும் காலநிலை, புதுப்பிக்க கூடிய வளம் மற்றும் புதுப்பிக்க முடியாத வளம், ஏற்றுமதி-இறக்குமதி ஆகியவை கேட்கப்படும்.ஒரு பக்க விடை பகுதியில் வரலாறில் ஏகாதிபத்தியம், சர்வதேச சங்கத் தோல்வி, 1857ம் ஆண்டு புரட்சி, ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் தர்மாம்பாள் ஆகியோரின் தொண்டுகள் முக்கியம்.குடிமையியலில் பஞ்சசீலம் மற்றும் அணி சேராக் கொள்கை, சார்க் அமைப்பு பற்றிய குறிப்பு, தேர்தல் முறை, நுகர்வோர் உரிமைகள், நாட்டு வருமானம், 11வது ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம், பசுமை புரட்சி, தமிழ்நாட்டின் மின் சக்தி திட்டங்கள் பற்றி விவரிக்க வேண்டும்.கால கோட்டில் 1900-1920, 1920-1950 வரையான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.வரைப்படத்தை பொருத்தவரை வரலாற்றில் ஆசியா மற்றும் இந்தியாவின் வரைப்படம், புவியியலில் இந்திய வரைபடத்தை பழகிக் கொள்ள வேண்டும்.ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் பொருத்துக இவற்றை புத்தகத்திற்கு பின்னால் கொடுக்கப்பட்டதை மட்டும் படித்தால் போதும்.
No comments:
Post a Comment