அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அறிவிப்பு
ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாணவர்களின் அடைவுத்திறன் தமிழ் சரளமாக எழுதுதல், வாசித்தல், ஆங்கிலம் சரளமாக எழுதுதல், வாசித்தல்; கணிதம் எளிய மற்றும் கடின கணக்குகள் செய்தல்; அக்டோபர் 2013 தேர்வுடன் ஒப்பிட்டு ஏன்
பின்தங்கிய நிலைக்கான காரணம், அதை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும்.அடைவுத்திறன் மேம்பட தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் யாவை, போன்ற கேள்விகளும், அதற்கான தீர்வுகளும், பள்ளிகளில் செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி முறையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு 'ஏ, பி,சி,டி, இ' என தரம் வழங்க வேண்டும்.
கணித உபகரணப்பெட்டி, செயல்திட்டம், புத்தக பூங்கொத்து, 'டிவி', 'டிவிடி' 'சிடி' பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
இதில், டிச.,2014ல் மாநில அளவிலான அடைவுத்திறன், தேர்வில் மாணவர்களிடம் வாசித்தல், எழுதுதல், கணித அடிப்படையில் செயல்பாடுகள் முன்னேற்றம் இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது,
No comments:
Post a Comment